இடம்பெயர்ந்தோர் குடியிருப்பு மீது விமானக் குண்டு வீச்சு
28.11.2008 தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
இராணுவ நடவடிக்கை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் கல்லாறு இராணிமைந்தன் குடியிருப்பில் இருந்த மக்கள் மீது இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிறிலங்கா அரசின் விமானங்கள் வீசிய குண்டுத்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டு 19 பேர் காணமடைந்து தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இக்குடியிருப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடும் மழையினால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள்மீது இக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.